தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் 

பட்டுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-05-28 14:39 GMT

உலக பசி தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தின், இளைஞர் அணி சார்பில் முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உலக பசி தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டலில் பேரில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பட்டுக்கோட்டை வள்ளலார் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

முன்னதாக வள்ளலார் முதியோர் இல்லத்திற்கு சென்ற இளைஞர் அணிச் செயலாளர் சுதாகர், தலைவர் முல்லைவேந்தன் மற்றும் பொறுப்பாளர்கள் அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். செயலாளர் விஜய் கார்த்தி, அம்ரேஷ், ஆதி, கார்த்திக் பாரதி, ரங்கநாதன் உள்ளிட்ட  தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News