பாஜக சார்பில் அன்னதானம்

வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2024-05-22 08:59 GMT

விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பாஜக சார்பில் நகரதலைவர் நாகராஜ் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி. விருதுநகரில் அமைந்துள்ள பராசக்தி வெயிலுகந்தம்மன் கோவில் பொங்கல் திருவிழா வருடாவருடம் வைகாசி மாதம் சிறப்பாக நடைபெறும், அதனை முன்னிட்டு இந்தவருடம் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி செவ்வாய்கிழமை கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்று இன்று பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.. அதனை முன்னிட்டு பக்தர்கள் கொடியேற்றும் நாளில் கையில் காப்பு கட்டி ஒரு வாரம் வெயிலுகந்தம்மனுக்கு விரதமிருந்து வந்தனர். இன்று நடைபெற்று வரும் பொங்கல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நாக்கில் அலகு குத்தியும், கையில் தீச்சட்டி, 21 அக்னி சட்டி, மற்றும் தொட்டில் குழந்தை எடுத்தும் பராசக்தி வெயிலு உகந்த அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

அதனை முன்னிட்டு பாஜக சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் பெண்டகண் பாண்டுரங்கன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நகரத் தலைவர் நாகராஜ் முன்னிலையில் மற்றும் நகரமகளிரணி நிர்வாகிகள் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஏராமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட மகளிரணி துணைத் தலைவி சங்கரேஸ்வரி, பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் காமாட்சி, மாநில பொதுக்குழு உறுப்பினர் S.K. சந்திரன், மாநில பட்டியல் அணி செயற்கு மு உறுப்பினர் குருசாமி, மாவட்ட பொதுச் செயலாளர் அழகர்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News