தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமி - லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

Update: 2023-11-14 05:25 GMT
போதை ஆசாமியை  மீட்ட தீயணைப்பு வீரர்கள் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்தவர் பூமிநாதன் (55). கூலி தொழிலாளி.இந்நிலையில் இவர் மதுபோதையில் சுமார் 50 அடி உயரம் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து சாயல்குடி காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதிகப்படியான மதுபோதையில் இருந்த பூமிநாதன் 50 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேலேயே தூங்கிவிட்டார். தவறி விழுந்து ஆபத்து ஏற்படுவதை தவிர்க்க தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை நிலைய அலுவலர் முத்து தலைமையிலான வீரர்கள் லாவகமாக மேலே ஏறி கயிறு மூலமாக அவரை பத்திரமாக மீட்டு தரையில் இறக்கினார்கள். கூலித்தொழிலாளி மதுபோதையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவிய நிலையில் அவரை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News