காஞ்சி அருகே குடிநீர் தொட்டி மின் மோட்டார் பழுது

காஞ்சி அருகே பழுதடைந்து பயன்பாடின்றி வீணாகி வரும் சிறுமின்விசை குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-06-29 15:01 GMT

குடிநீர் திட்டம்

காஞ்சிபுரம் ஒன்றியம், ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆறு ஆண்டுகளுக்கு முன் சிறு மின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அப்பகுதிவாசிகள் வீட்டு உபயோக தேவைக்கு சிறுமின் விசை குழாய் நீரை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின் மோட்டார் பழுதடைந்தது. அதை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், இப்பகுதிமக்கள் கூடுதல் குடிநீர் தேவைக்கு வேறு பகுதியில் உள்ள சிறுமின் விசை குழாயில் தண்ணீர் பிடித்து வர வேண்டியுள்ளது. எனவே, பழுதடைந்து பயன்பாடின்றி வீணாகி வரும் சிறுமின்விசை குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, வளத்தோட்டம் காலனி பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News