நல்லாளத்தில் குடிநீர் தொட்டிகள் அமைப்பு: எம்எல்ஏ திறந்து வைப்பு

நல்லாளத்தில் 20 லட்சம் மதிப்பில் இரண்டு குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் தொட்டிகளை எம்எல்ஏ ஜோதி திறந்து வைத்தார்.

Update: 2024-01-04 16:12 GMT

குடிநீர் இணைப்பை திறந்து வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் நல்லாளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கூட்டு குடிநீர் வடிகால் வாரியம் துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு குடிநீர் இணைப்பு மற்றும் சேமிப்பு தொட்டியை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

உடன் அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் C.K.ரவிகுமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி ஒன்றிய குழு உறுப்பினர் மகேஸ்வரி சேகர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரிகுப்பன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் புருஷோத்தமன் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழரசன் ஒன்றிய துணை செயலாளர் பழனி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ரகுபதி ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சின்ராசு மற்றும்,அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News