மன உளைச்சலில் டிரைவர் தற்கொலை

திருச்சி மாவட்டம், ஊத்தங்கரையில் மன உளைச்சல் லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-07 09:10 GMT

தற்கொலை

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தாத்தையங்கார்பேட்டை மலையப்பர் காலனியைச் சேர்தவர் 45 வயதான ரவிகுமார் இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சல் காரணமாக ஊரப்பாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த தாத்தையங்கார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக துறையூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து தாத்தையங்கார்பேட்டை போலீசார் வழக்பு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News