மேட்டூரில் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு.

சேலம் மாவட்டம், மேட்டூரில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு லாரி ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2024-01-18 09:34 GMT

எதிர்ப்பு தெரிவித்த லாரி ஓட்டுனர்

மேட்டூரில் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு லாரி ஓட்டுனர்கள் எதிர்ப்பு. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்க்காமல் செல்லும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒட்டுநர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி,இதற்காக சக ஒட்டுநர்களின் ஆதரவு கேட்டு மேட்டூர் அருகே சின்ன பார்க் பகுதியில் லாரி ஓட்டுநர்கள் சாலையில் படுத்து ஆதரவு திட்டினார்கள்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுனர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News