செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 151 பேர் உரிமம் ரத்து

செல்போன் பேசியபடி மோட்டார் சைக்கிள் ஓட்டிய 151 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2024-05-29 08:41 GMT

பைல் படம் 

சேலம் சரகத்திற்குட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதி முறை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறும் போது மோட்டார் வாகன விபத்துக்களை தடுக்க அவ்வப்போது சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 4 மாதத்தில் நடத்திய சோதனையில் செல்போன்பேசிய படி மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கிய 151 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்று கூறினர்.
Tags:    

Similar News