சமூகவலைத்தளம் ஒரு போதை
குமரி மாவட்ட போலீஸ் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-26 14:09 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஸ்காட் கல்லூரியில் காவல்துறை சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், "மாணவ மாணவியர்கள் சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும், தீய பழக்கங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும், சமூக வலைதளங்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் நல்ல செயல்கள் மற்றும் கருத்துக்களை மட்டுமே எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
சமூக வலைதளங்கள் ஒரு போதை; அதனை மாணவ மாணவியர்கள் பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.