குடிபோதையில் தகராறு - இளைஞருக்கு பாட்டில் குத்து

திருப்பத்தூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பாட்டிலால் குத்தப்பட்டதில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-20 03:29 GMT

பைல் படம் 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை எடுத்த பார்சம்பேட்டை பகுதியில் மதுபான கடைகள் இயங்கி வருகிறது இந்த நிலையில் ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து குடிமகன்கள் அங்கு குடிப்பது வழக்கம்.

இந்த நிலையில் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த கருணாமூர்த்தி மகன் கௌதம் வயது 27 அங்கு குடிக்க வந்துள்ளார்.  அதேபோல பழைய ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாபு மகன் விக்னேஷ் (22) மற்றும் அவருடைய நண்பர்கள் ஆன சூர்யா, பிரபாகரன், உள்ளிட்டோர் அங்கு குடிக்க வந்துள்ளனர் அப்போது இரு தரப்பினரும் குடிபோதையில் இருந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

 அதன் காரணமாக திடீரென பாட்டிலை உடைத்து விக்னேஷ் கௌதமை சராமாரியாக குத்தியுள்ளார் .இதனால் பலத்த காயமடைந்த கௌதமை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் பாட்டிலால் குத்தப்பட்டு வாலிபர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது

Tags:    

Similar News