மது போதையில் கத்தியால் குத்திய நண்பன் - போலீசார் வலைவிச்சு

நாகர்கோவிலில் மது போதையில் நண்பனை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-02-09 11:01 GMT
கொலையுண்ட லாரன்ஸ்
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே  கீழ ஆசாரிப்பள்ளம் பகுதி  ஜோசப்நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் (40). டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிக்கோலஸ் டிக்கா மெர்சி (40) சடையமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். லாரன்சின் நண்பர் கீழ ஆசாரிப்பழத்தைச் சேர்ந்த கிரிஸ்டோ வினிஷ் (33). இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் இவர்கள் இருவரும் லாரன்ஸ் வீட்டு அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்டோ வினிசை  லாரன்ஸ் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கிறிஸ்டோ வினிஷ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் லாரன்சை சரமாரியாக  வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடினார். சத்தம் கேட்டு லாரன்ஸ் மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் சென்று லாரன்சை  மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி லாரன்ஸ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். ஆசாரிப்பள்ளம் போலீசார்  வழக்கு பதிவு செய்து கிறிஸ்டோ வினிஷை தேடி வருகிறார்கள். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீஸ் ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார்.
Tags:    

Similar News