மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய துரை வைகோ

திருச்சியில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளை சந்தித்து துரை வைகோ ஆதரவு திரட்டினார்.

Update: 2024-03-29 10:45 GMT

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக போட்டியிடும் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரை வைகோ இன்று கோவில்கள், மசூதிகள், மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அந்த வகையில் திருச்சி தெற்கு மாவட்ட மக்கள் நீதிமய்யச் செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அதனைத் தொடர்ந்து மரக்கன்று நட்டு வைத்த துரை வைகோ நிர்வாகிகளிடம் கலந்துரையாடி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில் ம,நீ.ம. மாவட்ட துணைச் செயலாளர் ஸ்ரீரங்கம் பாலசுப்ரமணியன், திமுக திருச்சி மேற்கு மாநகரச் செயலாளர்,

மாநகர மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் வைரமணி உள்ளிட்ட, திமுக நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். காலை 11 மணிக்கு நிர்வாகிகளை சந்திக்க துரை வைகோ வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வேட்பாளர் வந்ததால் கடும் வெயில் நிர்வாகிகள் காத்திருந்தனர்.

Tags:    

Similar News