எலச்சிபாளையம் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

Update: 2023-12-06 05:53 GMT

ஜெயலலிதா நினைவு தினம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
எலச்சிபாளையத்தில்  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. நேற்று,  தமிழக  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதன்படி, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் சேர்மன்சக்திவேல் தலைமையில், எலச்சிபாளையம் பஸ்நிறுத்தம், எலிமேடு, குமரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அம்மாபேரவை மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் புரட்சிமுத்து, மாஜி சேர்மன் துரைசாமி, அ.தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் சக்திவேல், ஒன்றிய மகளிரணி செயலாளர் கயல்விழி, மாஜி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், ஒன்றியகுழு உறுப்பினர்கள் ஜெயசங்கர், அமுதாலோகநாதன், கிளாப்பாளையம் ஊராட்சி தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News