அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

காவேரிப்பாக்கம் அருகே அடையாளம் தெரியாத வாகன மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2024-06-07 10:21 GMT

விபத்து 

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (69). இவர் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அங்கிருந்தவர்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பன்னீர்செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News