தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த முதியவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் அடுத்த சகாய நகர் பகுதியில் தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-04 11:38 GMT

முதியவர் பலி 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சகாயம் நகர் பகுதியைச் சேர்ந்த திலீப் வயது 80 இவருக்கு கண் பார்வை குறைவாக உள்ளது இவர் வீட்டில் பேட்டரிக்கு ஊற்ற வைத்திருந்த ஆசிட் தண்ணீர் என நினைத்து குடித்து விட்டதால் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதைக் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News