மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே முதியவர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-10 07:42 GMT
சங்கரன்கோவிலில் மயங்கி விழுந்து முதியவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் வயது 67. விவசாயியான முருகன் தெற்கு ரத வீதி அருகே மயங்கி நிலையில் இருந்தார். அங்கிருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு முருகனை அனுமதித்தனர். அங்கு பணிகள் இருந்த டாக்டர்கள் முருகனை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News