சங்கரலிங்கபுரம் அருகே கண்மாயில் மூழ்கி முதியவர் பலி
சங்கரலிங்கபுரம் அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-28 15:02 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் ஆர்.சி., தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (80). இவர் சம்பவத்தன்று அந்த கிராமத்தில் உள்ள கண்மாயில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கால் தவறி கண்மாயில் தவறி விழுந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.