தேர்தல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு பணி

விழுப்புரத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை கண்காணிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-20 04:29 GMT

கண்காணிப்பு பணி

விழுப்புரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் பணிகள் தொடங்கி நடக்கிறது. விழுப்புரம்(தனி) தொகுதிக்கான, தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, நேற்று முதல் கண்காணிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. விழுப்புரம் ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை எண்: 04146 221950, 223265. மாவட்ட தொழில் மைய மேலாளர் அருள் தலைமையில், அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் இயங்கும் இந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், 3 ஷிப்டுகளாக சுழற்சி முறையில் 10 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொலை காட்சிகள், உள்ளூர் தொலை காட்சிகளில் வெளியாகும் தேர்தல் விளம்பரம், பிரசாரம் போன்றவை இதன் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், பறக்கும் படை குழுக்கள் கண்காணிப்பும், பொது மக்கள் தரப்பில் இருந்து வரும் தகவல்களும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் குறிப்பிட்டனர்.
Tags:    

Similar News