மதுராந்தகத்தில் காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை

மதுராந்தகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கும் வந்தும் கொடிக்கம்பங்கள் மற்றும் போஸ்டர் அகற்றபடாமல் உள்ளன.

Update: 2024-03-18 08:28 GMT
மதுராந்தகத்தில் பறக்கும் கொடிக்கம்பங்கள் மற்றும் போஸ்டர்
செங்கல்பட்டு மாவட்டம்,வருகின்ற ஏப்ரல் மாதம் 19 -ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் என தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை நேற்று அறிவித்து இருந்தது தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்த பிறகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் விதிகளை நடை முறை படுத்தாமல் மதுராந்தகத்தில் பல இடங்களில் கொடிக்கம்பங்கள் சுவர் விளம்பரங்கள் அழிக்கப் படவில்லை, அகற்றப்படவில்லை, கட்சி தலைவர்களின் சிலைகள் மறைக்கப் படவில்லை,தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டு தேர்தல் விதிமுறைகள் காற்றில் பறக்கின்றன.
Tags:    

Similar News