சிவகாசி அருகே மின் கம்பம் அச்சத்தில் பொதுமக்கள்...

சிவகாசி அருகே உள்ள கோப்பையநாயக்கன்பட்டியில் அபாய நிலையில் மின்கம்பம்... அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர்.

Update: 2024-06-24 12:17 GMT

 மின் கம்பம்

சிவகாசி அருகே உள்ள கோப்பையநாயக்கன்பட்டியில் அபாய நிலையில் மின்கம்பம்... அச்சத்தில் கிராம மக்கள். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கோப்பையநாயக்கன்பட்டி கிராமத்தில் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளன. விவசாய கூலித்தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் அமைக்கப்பட்டு உள்ள,இந்த மின் கம்பம் அடி பகுதி மற்றும் மேல் பகுதியில் மிகவும் சேதமடைந்து ஏற்கனவே இந்த மின் கம்பம் மாரமத்து பார்த்த நிலையில் மீண்டும் அபாய நிலையில் உள்ளன. இதனால் மின் கம்பத்தை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் அச்சத்திலேயே இருக்கின்றனர்.

எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் அடிமட்டத்திலிருந்து சேதமடைந்திருப்பதால்,அந்தப் பகுதியைக் கடந்து போகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருப்பதாக கூறுகின்றனர் கிராம மக்கள். இந்த அபாய மின் கம்பத்தை மாற்றக்கோரி மின்வாரிய அலுவலகத்தில் தொடர்ந்து புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

மின்வாரிய ஊழியர்கள் வெறுமனே அடிக்கடி பார்த்துச் செல்கின்றனரே தவிர,எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.இந்த மின்கம்பம் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில்,சிமென்ட் பூச்சுகள் கொட்டி,கம்பிகள் வெளியே மோசமாக இருப்பதால் மிகுந்த அச்சத்துடன் இருக்கிறோம். எனவே அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News