ரம்ஜான் பண்டிகை: மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணையில் இயங்கும்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணையில் இயங்கும்‌ என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-04-10 16:53 GMT
மின்சார ரயில் ரத்து, போக்குவரத்து நெரிசல்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- "கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும்.

பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைபடி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News