கேங்க்மேன்களுக்கு பாதுகாப்பான பணி வழங்க கோரி மின் ஊழியர் ஆர்ப்பாட்டம்

கேங்க்மேன்களுக்கு பாதுகாப்பான பணி வழங்க கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-05 15:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் கேங்க்மேன்களுக்கு மின்சாரம் இல்லாத இடங்களில் மட்டுமே பணி வழங்க வேண்டும். சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்கிட வேண்டும்.  கள உதவியாளராக மாற்றம் செய்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வட்டச் செயலாளர் காணிக்கைராஜ், பொருளாளர்  சங்கர், நிர்வாகிகள்  அறிவழகன், கலைச்செல்வன், ஆரோக்கியசாமி, ராஜப்பா, கோபால்சாமி, சுதாகர் ஆகியோர் உரையாற்றினர். மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் நிறைவுறையாற்றினார். 

முன்னதாக ,தஞ்சை மினவாரிய தலைமை பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், ஏராளமான கேங்க்மேன் தோழர்கள் பங்கேற்றனர்

Tags:    

Similar News