மனைவி பிரிந்து சென்ற விரக்தி- எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாம்புத்தூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-11 13:23 GMT

தற்கொலை 

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் புள்ளகவுண்டன்புதூர் பகுதியில் வசித்து வரும் சந்தோஷ்(35) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.13 ஆண்டுகளுக்கு முன் பவித்ரா என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சந்தோஷிற்கு குடிபழக்கம் இருந்த நிலையில் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட பவித்ரா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.மனைவி பிரிந்த சென்றதால் விரக்தி அடைந்த சந்தோஷ் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டர்.

இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.

Tags:    

Similar News