புளியங்குடி அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

புளியங்குடியை சேர்ந்த எலக்ட்ரீசியனான ராஜதுரை (35). பைக்கில் சென்ற்போது ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Update: 2024-01-10 10:46 GMT

பைல் படம்

தென்காசி மாவட்டம் புளியங்குடி வளன் தெருவைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ராஜதுரை(35). எலக்ட்ரீசியனான இவா், பைக்கில் புளியங்குடி எல்ஐசி அலுவலகம் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டாராம். அப்போது, பின்னால் வந்த பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடலை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இதைக் குறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News