மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

Update: 2023-12-21 05:28 GMT

விழிப்புணர்வு பேரணி 

உளுந்தூர்பேட்டையில் தேசிய மின் சிக்கன வார விழாவையொட்டி மின் சிக்கனத்தை கையாளும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்வாரிய ஊழியர்கள், மாணவர்களின் பேரணி நடந்தது. போலீஸ் நிலையத்தில் இருந்து துவங்கிய பேரணியை கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி., மகேஷ் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தனர். செயற்பொறியாளர்கள் சர்தார், கணேசன், மயில்வாகனன், உதவி செயற் பொறியாளர்கள் சிவராமன் அய்யம்பெருமாள், அசோக் குமார், உதவி பொறியாளர்கள் சுதாகர், சுதா, முத்துக்குமாரசாமி, அருளாவன்,ரங்கசாமி, வினோத், ராதாவாசன், ரதிப்பிரியா, காயத்ரி, தமிழ்மதி, மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், அரசு ஐ.ஐ.டி., மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News