லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் கைது

சத்தியமங்கலத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய இரண்டு மின் வாரிய ஊழியர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-07 07:55 GMT

பைல் படம்

சத்தியமங்கலம் அடுத்த சிக்கரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் . இவர் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டிற்க்கு மின் இணைப்பு கேட்டுள்ளார்.இதற்க்கு சிக்கரசம்பாளையம் மின்சார ஊழியர் போர் மேன் சண்முகம் என்பவர் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.இது குறித்து அருண் லஞ்ச ஒழிப்புத்துறை அதாரிகளிடம் தகவல் தெரிவித்தார். மின்வாரிய அலுவலகத்தில் அருண் ராசயனம் தடவி பணத்தை கொடுத்துள்ளார் மறைத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போர் மேன் சண்முகம், மின் பாதை ஆய்வாளர் பாலசுப்ரமணியம் ஆகியோரை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்க்கொண்டு இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News