யானைகளின் மீது ஏற்றி திருமுறை வீதி உலா

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் யானை மீது திருமுறை வீதியுலா உற்சவம் நடைபெற்றது.

Update: 2024-05-24 01:06 GMT

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் யானை மீது திருமுறை வீதியுலா உற்சவம் நடைபெற்றது.


மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில்  50 ஆண்டுகளுக்கு முன்னர் தருமபுரம் ஆதீனம் 25-வது குருமகா சந்நிதானம் அருளாட்சி காலத்தில் 5 யானைகளின் மீதேற்றி திருமுறை வீதியுலா நடைபெற்ற குறிப்புகள் காணப்படுகிறது.  அதன்பின்னர் சில காரணங்களால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. நிகழாண்டு ஞானபுரீஸ்வரர் பெருவிழா  மே 20-ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் நான்காம் நாள் திருவிழாவில் யானை மீதேற்றி திருமுறை வீதியுலா நிகழ்ச்சி 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட்டது.  

இதையொட்டி, ஆதீன திருமடத்திலிருந்து தேவாரம், திருவாசகம் ஆகிய திருமுறைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த யானையின் மீது திருமுறைகளை ஏற்றி, தருமபுரம் ஆதீன தேவார பாடசாலை மாணவர்கள் திருமுறைகளை வாசித்தவாறு செல்ல, ஆதீனத்தின் நான்கு வீதிகளின் வழியே திருவீதியுலா நடைபெற்றது. ஆதீனத்தின் மேற்கு வாசலில் தருமபுரம் ஆதீனம்  முன்னிலையில், திருமுறைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. வீதி உலாவில் வீடுகள் தோறும் பொதுமக்கள் பூரணகும்ப மரியாதை அளித்து தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News