முகாமிட்டுள்ள யானை கூட்டம்

தருமத்துப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தால் வாழை பயிர்கள் சேதம்.

Update: 2023-12-01 08:56 GMT

தருமத்துப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னிவாடி: தருமத்துப்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் வாழை பயிர்களை சேதப்படுத்தின.

கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழை எலுமிச்சை, மிளகு, காபி சாகுபடி நடக்கிறது. தண்ணீர், உணவு தேவைக்காக மலை கிராம விளைநிலங்களில் வன உயிரினங்கள் புகுந்து சேதப்படுத்துவது தொடர்கிறது. இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் யானைகள் விளைநிலங்கள், மெயின் ரோடுகளில் உலா வரத்துவங்கி உள்ளன. சாகுபடி சேதப்படுத்துவது மட்டுமின்றி மலை கிராம விவசாயிகள் அச்சத்துடன் நடமாடும் நிலை நீடிக்கிறது.

தற்போது தருமத்துப்பட்டி அடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஒரு குட்டியுடன் கூடிய 4 யானைகள் முகாமிட்டுள்ளன. வாழை, தென்னை சாகுபடியை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், தோட்டத்துசாலைகளில் தங்கி விவசாயம் மேற்கொண்டு வந்த பலர் வெளியேறி கிராமத்திற்குள் வந்து விட்டனர்.

Tags:    

Similar News