பைக் விபத்தில் பொறியியல் மாணவா் பலி!

தூத்துக்குடியில் தனியாா் பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Update: 2024-04-20 02:43 GMT

பைல் படம்

தூத்துக்குடி பொன்நகரத்தைச் சோ்ந்த ஒநேசி மகன் எலியாஸ் ஒ.பெபின் ராஜா (23). இவா் தூத்துக்குடியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார். கடந்த 15ஆம் தேதி தனது பைக்கில் 3ஆம் கேட் பாலத்திலிருந்து அண்ணாநகா் பிரதான சாலையில் சென்றாராம். இடதுபுறம் திரும்ப முயன்ற அவா் மீது தனியாா் பேருந்து மோதியதாம்.

இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் நேற்று உயிரிழந்தாா். இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News