ஜீவானந்தம் நினைவுதினம் கடைபிடிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும், சமூக சீர்திருத்தவாதியுமான ஜீவானந்தம் என்பவரின் 61 ஆவது நினைவுதினம் இன்று கடைபிடிக்கபட்டது.

Update: 2024-01-18 09:11 GMT


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும், சமூக சீர்திருத்தவாதியுமான ஜீவானந்தம் என்பவரின் 61 ஆவது நினைவுதினம் இன்று கடைபிடிக்கபட்டது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும், சமூக சீர்திருத்தவாதியுமான ஜீவானந்தம் என்பவரின் 61 ஆவது நினைவுதினம் இன்று கடைபிடிக்கபட்டது. இதனையொட்டி அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தண்டபாணி தலைமையில் ஜீவானந்தம் திருவுறுவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. பின்னர் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தபட்டது. பின்னர் அவரின் பெருமைகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதில் அரியலூர் ஒன்றிய செயலாளர் ராயதுரை, ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தசாமி மற்றும் வால்பாறை மாணிக்கம், ஆலத்தூர் பழனிசாமி, அரியலூர் நகர கிளை பகுதியை சேர்ந்த சுரேஷ், ராஜேந்திரன், கயர்லாபாத் கிளை பகுதியை சேர்ந்த ராஜா, ரவி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News