முன்விரோதத்தில் கொலை - 4 பேருக்கு ஆயுள் தண்டனை

வியாசர்பாடியில் முன் விரோதம் காரணமாக நடைபெற்ற கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2024-04-26 05:10 GMT

பைல் படம் 

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் என்ற ஞானசேகரன் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். வியாசர்பாடியை சேர்ந்த கலைச்செல்வன், அவரின் நண்பர்கள் அருண்குமார், ராமலிங்கம், மற்றும் மைக்கேல், ஆகியோர் மீது எம்.கே.பி., நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சென்னை 17வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் தெரிவித்தார். தொடர்ந்து, நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும் ,தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Tags:    

Similar News