இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

ஆய்க்குடி, அம்மையப்பன் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜூக்கு பொதுமக்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2024-04-12 07:16 GMT

தேர்தல் பிரசாரம் 

நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை செல்வராஜ் போட்டியிடுகிறார். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. ஆய்க்குடி ,தாழைக்குடி ,காவனூர் அம்மையப்பன் பகுதிகளில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வை செல்வராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார் . அப்போது அவருக்கு செல்லும் வழி எங்கும் பட்டாசு வெடித்தும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Tags:    

Similar News