இ.பி.எஸ் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும்: எஸ் எம் சுகுமார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என ராணிப்பேட்டை அதிமுக செயலாளர் எஸ் எம் சுகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-05-07 11:45 GMT

சுகுமார்

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 70-வது பிறந்த நாள் விழா வருகின்ற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அனைத்து நிலை பொறுப்பாளர்களும்,

அந்த நாளில் மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட உறுதியேற்க வேண்டும். அதே போல, நகர, ஒன்றிய, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம்,

மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News