சமூகநீதிப் பேரவையின் சார்பாக சமத்துவ இஃப்தார்

காயல்பட்டினத்தில் சமூகநீதிப் பேரவையின் சார்பாக சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-02 01:27 GMT

காயல்பட்டினத்தில் சமூகநீதிப் பேரவையின் சார்பாக சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சமூகநீதிப் பேரவையின் சார்பாக சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பேரவையின் தலைவர் அல்ஹாஜ் முஹம்மது அலி தலைமை வகித்தார். WEWA நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், விஜயராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பொதுத் தேர்வை எழுதிக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. குர்ஆனை மனனம் செய்த இளம் ஹாஃபிழ்கள் கௌரவிக்கப் பட்டனர்.  ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதி களில் சமூகநீதிப் பேரவையின் புதிய கிளைகள் தொடங்கப்பட்டன. நிகழ்வில் நண்பர்கள் கருத்துரை ஆற்றினர். சமூக நீதிப்பேரவை பொதுச் செயலாளர் அகமது சாஹிபு விளக்க உரையாற்றினார். இறுதியில் உலக அமைதிக்காகவும், இந்திய திருநாட்டில் நல்லாட்சி மலர சிறப்புப் பிராத்தனை செய்யப்பட்டது. பேரவையின் நிர்வாகிகள், உலமாக்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஜமாத்தினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மாணவர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News