ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2024-01-13 10:31 GMT

சமத்துவ பொங்கல் விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், அவர்கள் தலைமை வகித்தார் .

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன். மேகலா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். அலுவலகப் பணியாளர்கள் பாரம்பரிய தமிழர் உடை அணிந்து பொங்கல் வைத்து படையல் இட்டு பூஜைகள் செய்து பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக கோஷங்கள் எழுப்பி சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கினார்கள். மேலும் அலுவலகத்தில் வண்ண வண்ண கோலங்கள் இட்டும் மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News