கள்ளசாராய ஊறல் அழிப்பு

கள்ளகுறிச்சி பகுதியில் கள்ளசாராயம் விற்கப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து கள்ளசாராய ஊறலை காவல்துறையினர் அழித்தனர்.

Update: 2024-03-17 07:47 GMT

கள்ளசாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா, உத்தரவுப்படி சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் பிரதாப்குமார் தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வந்தகபாடி தெற்கு ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 05 பேரலில் சுமார் 1,000 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News