ஈரோடு: குறைதீர் கூட்டம் எப்போது?

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-07 13:44 GMT

குறைதீர் கூட்டம்

ஈரோடு பாரளுமன்ற தொகுதிக்கு 19.04.2024 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் 16.03.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டதால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதி திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் இதரகுறை தீர்க்கும் முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் 10.06.2024 முதல் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால்ல சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News