மூன்றாம் நாளான இன்றும் வேட்புமனு தாக்கல் இல்லை

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மூன்றாம் நாளான இன்றும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Update: 2024-03-22 16:09 GMT

 மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மூன்றாம் நாளான இன்றும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றும் யாரும் வரவில்லை. தேர்தலுக்கான வேட்பு மனு வழங்கும் பணி 20ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முதல் தளத்தில் துவங்கியது. கடந்த மூன்று நாட்களும் 20 வேட்புமனு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன, இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவரவில்லை. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சியினர் மனு தாக்கல் செய்ய வருவதாக மாவட்ட செயலாளர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News