விருதுநகரில் ஆதி திராவிட பள்ளி மாணவர்களுக்கான கண்காட்சி

விருதுநகரில் ஆதி திராவிட பள்ளி மாணவர்களுக்கான கல்வி 40 கலைத்திறன் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-07 12:48 GMT
கண்காட்சியை ஆய்வு செய்த ஆட்சியர்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை சார்பில், ராம்கோ சிமெண்ட் மற்றும் பம்பில் டிரஸ்ட் இணைந்து ஆதிதிராவிடர் பள்ளி குழந்தைகளுக்காக கல்வி 40 கலைத்திறன் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடத்தினர்.

இந்த கண்காட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் 14 பள்ளிகளைச் சேர்ந்த 90 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள். இந்த புகைப்படக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் சிறப்பாக படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் அதை தொடர்ந்து பங்கேற்ற 14 பள்ளிகளைச் சார்ந்த 90 மாணவர்களுக்கு பங்கேற்றத்திற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News