வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்து விபத்து

சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்து ஏற்பட்ட விபத்து காரணமான ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-07-01 11:33 GMT

சிவகங்கை அருகே வெடிகுண்டு தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் வெடித்து விபத்து காரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.


சிவகங்கை அருகே அரசேனரி கீழமேடு என்ற கிராமத்தில் மோட்டார் பம்பு செட்டு அருகே உள்ள ஒரு ஓட்டு வீட்டில் இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அரவிந்தன் என்பவர் அவ்வப்போது வந்து சென்றுள்ளார். இவர் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இந்த ஓட்டு வீட்டில் சேகரித்து வைத்திருந்த நிலையில் கடும் வெப்பத்தால் திடீரென வெடி மருந்து வெடித்து சிதறியதில் ஓட்டு வீடு முழுவதும் பலத்த சேதம் அடைந்ததோடு பயங்கர சப்தத்துடன் இந்த வெடி விபத்து ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அச்சமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் லிங்க பாண்டி சார்பு ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த இடத்திற்கு அடிக்கடி வந்து சென்ற அரவிந்தன் என்ற இளைஞரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News