ஆண்டிபட்டி தரைப்பாலத்தில் சுற்றுலாபயணிகள் செல்ல தடை நீட்டிப்பு
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தரைப்பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2023-11-28 09:22 GMT
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கடந்த 23 ஆம் தேதி அன்று வினாடிக்கு 6099 கன அடி நீர் திறக்கப்பட்டதால் வைகை அணையில் உள்ள தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கியது.
இதனால் தரைப் பாலத்தை சுற்றுலா பயணிகள் கடப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அறையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தரைப்பாளத்தில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது