ரூ.5.37 லட்சம் மதிப்பில் குடிநீர் விநியோக பைப்லைன் நீட்டிப்பு

ஆரணி அருகே முல்லைப்பட்டில் ரூ. 5.37 லட்சம் மதிப்பில் குடிநீர் விநியோக பைப்லைன் நீட்டிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2024-05-09 05:19 GMT

அதிகாரிகள் ஆய்வு 

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பட்டு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5.37 லட்சம் மதிப்பில் குடிநீர் விநியோக பைப்லைன் நீட்டிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ,அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர்  தீரஜ் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News