நடுவலூர் அரசு பள்ளியில் மாணவர்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு !
நடுவலூர் அரசு பள்ளியில் மாணவர்களை அச்சுறுத்திய விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து விஷ வண்டு கூடுகளை அழித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-22 09:24 GMT
கெங்கவல்லி
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, நடுவலூர் ஊராட்சி உட்பட்ட சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில், ராட்சஷ விஷ வண்டுகள் கூடுகள் கட்டியிருந்தன. இதனால் அவ்வப்போது மாணவர்களை விஷ வண்டுகள் கடித்து அச்சு றுத்தி வந்தன. இதுகுறித்து கெங்கவல்லி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலு வலர் தாமரைச்செல்வி, தீயணைப்புத்துறைக்கு புகார் அளித்தார். அதன் பேரில், நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டி யன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து விஷ வண்டு கூடுகளை அழித்தனர். இதனால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.