விஷ தேனீக்கள் அழிப்பு

கெங்கவல்லி அருகே லத்துவாடியில் அரச மரத்தில் கூடுகட்டியிருந்த விஷதேனீக்களை, தீயணைப்புத்துறையினர் அழித்தனர்.

Update: 2024-05-03 15:18 GMT

கெங்கவல்லி அருகே லத்துவாடியில் அரச மரத்தில் கூடுகட்டியிருந்த விஷதேனீக்களை, தீயணைப்புத்துறையினர் அழித்தனர். 

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே லத்துவாடி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அரச மரத்தில் விஷதேனீக்கள் கூடு கட்டி கொண்டு இருந்தது. இதுகுறித்து இன்று பொது மக்கள் மற்றும் கால்நடைகளை அச்சுறுத்தி வருவதாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் தீயணைப்பு துறை நிலை அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையில் விரைந்து வந்து விஷத்தை தேனீக்களை அழித்தனர்.
Tags:    

Similar News