திருக்கோவிலூரில் கண் பரிசோதனை முகாம் !

திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2024-03-13 04:53 GMT

கண் பரிசோதனை முகாம்

திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது. கோவை சங்கரா மருத்துவமனையுடன் இணைந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்திய முகாமிற்கு, ரோட்டரி கிளப் தலைவர் வாசன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கோதம்சந்த் முகாமைத் துவக்கி வைத்தனர். ஜெயக்குமார், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி முன்னிலை வகித்தனர். சங்கரா கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் 225 பேருக்கு கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். 35 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Tags:    

Similar News