போலி மது விற்ற அண்ணன், தங்கை கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் போலி மது விற்ற அண்ணன், தங்கையை போலிசார் கைது செய்தனர்.

Update: 2024-05-09 13:57 GMT

கைது

 அவிநாசி போலிசார் நடுவச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருக்கன்காட்டுபுதூர் குட்டையில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் நடுவச்சேரியை சேர்ந்த கருப்புசாமி (வயது 60) மற்றும் பாப்பா (48) என்பதும் அண்ணன், தங்கையான இவர்கள் நச்சுத்தன்மையுள்ள போலி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 7 போலி மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்...

Tags:    

Similar News