விஜயகாந்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

பள்ளிபாளையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்

Update: 2023-12-28 10:11 GMT

விஜயகாந்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்

தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து, அவருடைய ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பள்ளி பாளையத்தில் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நினைவஞ்சலி நிகழ்வு பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே நடைபெற்றது. ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
Tags:    

Similar News