திருப்பத்தூர்: விவசாயியை கடித்த விஷபாம்பு
திருப்பத்தூர் அடுத்த பேரம்பட்டு பகுதியில் பாம்பு கடித்து விவசாயி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-23 11:24 GMT
கோப்பு படம்
திருப்பத்தூர் அடுத்த பேரம்பட்டு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் வயது 60 இவர் தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார்.
இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்ற இந்த சம்பவம் குறித்து சிறப்புத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.