விவசாயி தற்கொலை
செந்துறை அருகே விஷம் குடித்த விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-19 00:45 GMT
தற்கொலை
நத்தம் அருகே செந்துறை நல்லபிச்சன்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் வயது 39 விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் கடந்த 14ஆம் தேதி மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.