தம்மம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சேலம் அருகே குடும்ப தகராற்றால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறயினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-31 11:36 GMT
தம்மம்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஊராட்சி கரிகாலன்குட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி அமுதா (54). அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர் இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மூர்த்தி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.